Thursday, August 4, 2011

ஆடு கொடுத்த சாபம்


ஆடு கொடுத்த சாபம்


கிராமக் கோயில்களில் ஆடுகளைப் பலி கொடுக்கும் பழக்கம் இன்றும் உள்ளது. ஆட்டின் கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துச் செல்வர். கூடவே ஒரு கையில் ஆடு தின்னத்தக்க தழைகளை அதற்கு காட்டிக்கொண்டே செல்வர். அந்த ஆட்டுக்கு தனக்கு உணவகவுள்ள அந்த தழைகளைத் தவிர, நிகழ இருக்கிற பயங்கரம் தெரியாது! கோயில் வரை கொண்டு சென்று அதை அங்கு பலியிட்டு விடுவர்.

இருபதாயிரம் ஆண்டுகளாக வாழ்வின் அனுபவத்தை பார்த்துவிட்டு மனிதகுலம்,ஒருவரை ஒருவர் அழிப்பதற்காக இன்றும் உலகில் போர்
 செய்கிறான். இளமையும், துடிப்பும் மிக்க இளைஞர்கள் பலரைக் கூட்டி, பணத்தையும், உணவையும் காட்டி ஒன்று திரட்டி, கொலைக்களமாகிய போர்க்களத்தில் நிறுத்தி பலி கொடுக்கிறான். மனிதக்குலத்தை பிடித்த இந்த சாபம் என்று விடியும்?

No comments:

Post a Comment